×

அருணாச்சலா பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

மார்த்தாண்டம், பிப். 20 மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், வெள்ளிச்சந்தை அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.
குளச்சல் ஏஎஸ்பி கார்த்திக், வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி ஆகியோர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினர். அவர்கள் பேசுகையில், பைக்கில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். குடிபோதை மற்றும் அதிவேகத்தால் விபத்துக்கள் அதிகம் நடந்து வருகின்றன. வாகனங்களை இயக்கும்போது விதிமுறைகளை கடைபிடித்து கவனமாக ஓட்ட வேண்டும்.
அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுவதே விபத்துக்கள் அதிகம் நடக்க காரணமாகிறது. வாகனங்களில் செல்பவர்கள் தங்கள் குடும்பத்தை எண்ணிப்பார்த்து கவனமுடனும், விழிப்புடனும் ஓட்ட வேண்டும். பெண்கள் துப்பட்டாவை பறக்கவிட்ட நிலையில் வாகனங்களை ஓட்டி செல்லக்கூடாது என்றனர்.
நிகழ்ச்சியையொட்டி கல்லூரி மாணவிகள் கலந்துகொண்ட சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு பேரணியும் நடந்தது. கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவகர், இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Arunachala Engineering College Road Safety Awareness Camp ,
× RELATED நாகர்கோவில் மாநகராட்சி...